Tamil News Live Today: தொடர் மழை… வேலூர், ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதே போன்று, வேலூர் மாவட்டத்திலும் தொடர்மழை காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *