காணும் பொங்கல்… சென்னையில் அனைத்து காவலர்களும் பணியில் இருக்க உத்தரவு!
தமிழ்நாட்டில் இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கல் அன்று மக்கள், கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடுவார்கள். இதனால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். சென்னையில் மெரினா கடற்கரை, மாமல்லபுரம், பூங்காக்கள், பொருட்காட்சி திடல், வணிக வளாகங்கள் என எல்லா இடங்களிலும் கூட்டம் அதிக அளவில் கூடும். சென்னையில் இன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, காவலர்கள் அனைவரும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 15,500 காவலர்கள் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
