தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (14.10.2023) மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்துக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கனிமொழி எம்.பி முன்னிலை வகிக்கிறார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை தந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் புத்தகம் வழங்கி வரவேற்றார். அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரியும் உடன் இருந்தார். இன்று மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com