பின்னடைவு விவகாரம் வெடிக்கும் முன்பே இதுகுறித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், `குற்றம்புரிந்தவர்களின் குறிப்பட்ட சமூகம் வெளிபட்டுவிட்டால் தேர்தல் அரசியல் தாக்கங்களும், வாக்கு அரசியலில் பிரச்னைகளும் ஏற்பட்டுவிடும் என மறைப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.


அதிகாரிகள் துணையோடு வேங்கைவயல் குற்றவாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள். அரசியலுக்காக காப்பாற்றப்படுகிறார்கள் என்றுதான் நான் கணிக்கிறேன்” என அதிர்ச்சி கிளப்பியிருந்ததையும் கவனிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சியினரோ “தி.மு.க அரசு வேங்கைவயல் குற்றவாளிகளை கண்டுபிடிக்காது.. அப்படியே காலம் கடத்திவிடும்” என பகிரங்க குற்றசாட்டை முன்வைக்கிறார்கள்.


“தமிழ்நாடு அரசு திறன்மிகுந்த காவல் அதிகாரிகளை உடனடியாக நியமித்து, அவர்கள் தலைமையில் குழு அமைத்து கெடு விதித்து குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வழிவகை செய்ய வேண்டும். அப்படிமுடியவில்லையா.. காலம் தாழ்த்தாமல் உடனடியாக சி.பி.ஐ வசம் ஒப்படைத்துவிட்டு தமிழ்நாடு காவல்துறை ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.” எனக் கொதிக்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர்.
இப்படியான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு செயல்களின் வழியேதான் பதில் சொல்ல வேண்டும் தமிழ்நாடு காவல்துறையும் அரசும்… ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறையின் அடுத்த கட்டம் என்னவென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com