தமிழகம் முழுக்க மொத்தம் இரண்டு கோடியே 24 லட்சம் கார்டுகள் உள்ளன. இதில் 2 கோடியே 20 லட்சம் கார்டுகளுக்கும், இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு உத்தரவிட்டது. இதில் ரொக்கமாக வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் கிட்டத்தட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், அரிசி, கரும்பு, சர்க்கரை, வேட்டி மற்றும் சேலை விஷயத்தில்தான் தமிழகம் முழுக்கவே குமுறல்கள்.
அதாவது, இந்த பொருள்களுக்காக 865 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 ஆயிரத்து 887 ரேஷன் கடைகள் உள்ளன. கடைக்கு சராசரியாக 650 குடும்ப அட்டைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 100 பேர் பொருள்கள் கிடைக்கவில்லை என்கிற குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். இதை வைத்து ஒரு குட்டிக் கணக்கு போட்டுப் பார்ப்போம். 34,887 (ரேஷன் கடைகள்) x 100 (குடும்ப அட்டைகள்) = 34,88,77. ஆக, தமிழக அளவில் சுமார் 35 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகையுடன் வழங்குவதாகக் கூறப்பட்ட பொருள்கள் கிடைக்கவில்லை.


அரசாங்கம் ஒதுக்கீடு செய்த தொகையில், 1,000 ரூபாய் போக, வேட்டி-சேலை, கரும்பு, சர்க்கரை மற்றும் அரிசி ஆகியவற்றுக்காக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 400 ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால். 35,00,000×400 ரூபாய் =140 கோடி ரூபாய்.
இது உத்தேசக் கணக்குதான். உண்மையில் ஊருக்கு ஊர் மக்கள் கதறுவதைக் கணக்குப் போட்டுப் பார்த்தால்… கழகக் கதை கந்தல்தான். கடந்த ஆண்டும் இப்படித்தான் பல ஊர்களில் வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படவில்லை என்று மக்கள் கதறினார்கள். இந்த ஆண்டும் அதே கதறல்தான்.
நன்றி
Publisher: www.vikatan.com