’தமிழ்நாட்டிற்கு பாஜகவே தேவையில்லை’..!! ’கூட்டணி முறிந்துள்ளதை யாரும் நம்பவில்லை’..!! கருணாஸ் தாக்கு..!!

’தமிழ்நாட்டிற்கு பாஜகவே தேவையில்லை’..!! ’கூட்டணி முறிந்துள்ளதை யாரும் நம்பவில்லை’..!! கருணாஸ் தாக்கு..!!

தருமபுரி மாவட்டம் அரூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ கருணாஸ், “வருகிற 27ஆம் தேதி மருது சகோதரர்கள் நினைவை போற்றும் வகையிலும், 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி வருகிறது. இதனை இந்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்கின்ற வகையில், சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். பலமுறை நான் சட்டமன்றத்தில் வலியுறுத்தியதை, பீகார் மாநிலத்தை போன்று, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்த தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு 20,000 நாட்கள் மேல் சிறையில் கொடுமைகளை அனுபவித்துள்ளார். அவரின் தியாக உணர்வை போற்றும் வகையில், எதிர்கால சந்ததிக்கு நினைவு கூறும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1994ஆம் ஆண்டு கள்ளர், மறவர், அகமுடையர் சமூகத்தை, தேவரினம் அறிவித்து வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். பாஜக என்பது தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத சிந்தாந்தம். இதனை தொடக்கத்தில் இருந்தே நான் எதிர்த்து வருகிறேன். ஜெயலலிதா ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடியாக, தன்னிச்சையாக, தனித்துவமான முன்னேற்பாடுகளை செய்தவர் என்பது நாடறியும்.

ஆனால், அவரது மறைவிற்குப் பிறகு அதற்கு தலைமை ஏற்றவர்கள் எந்தெந்த தீர்மானத்தை எல்லாம் வரவேற்றார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. இந்நிலையில், பாஜக-அதிமுக கூட்டணி பிரிந்து இருக்கிறது என்பது 99 சதவீதம் யாருக்குமே நம்பிக்கை இல்லை. அமலாக்கத் துறையின் நடவடிக்கை என்பது இந்த பாஜக ஆட்சியில் தான். அரசியல் ரீதியான கால் புணர்ச்சியிலே சோதனை நடத்தி வருகின்றனர்” என்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *