சிங்கப்பூரின் 9-வது அதிபராக பதவியேற்றார் தமிழர் தர்மன் சண்முகரத்தினம்..!

சிங்கப்பூரின் 9-வது அதிபராக பதவியேற்றார் தமிழர் தர்மன் சண்முகரத்தினம்..!

சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 % வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து இன்று அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்தினம்.

சிங்கப்பூரில் அதிபராக இருந்த 68 வயது பெண்மணியான ஹலீமா யாக்கோப் அவர்களின் 6 ஆண்டு பதவி காலம் செப்.13ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது. அதனால், ஹலீமா யாகூப் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி அதிபராக தேர்வானார். ஹலீமா யாக்கோப் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். இதனையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் பிறந்த தமிழரான முன்னாள் அமைச்சா் தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான கோக் சாங், டான் கின் லியான் ஆகிய 3 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற்றார். இதனால், சிங்கப்பூரின் 9-வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்ட மற்ற இரு வேட்பாளர்களுக்கு 20 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளே பெற்றனர்.

இந்நிலையில் 70.4 % வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9-வது அதிபராக பதவியேற்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *