கொல்கத்தாவை சேர்ந்த ஆசிரியரான லலித் ஷா, போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், டெல்லியில் இருந்து பஸ் மூலம் ராஜஸ்தானில் உள்ள நாகவுர் என்ற இடத்திற்கு சென்று இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கியதாகவும், போலீஸார் தன்னை தேடுவதாக அறிந்ததும் வந்து சரணடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவருடன் மகேஷ் என்பவரும் போலீஸ் நிலையம் வந்திருந்தார்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, மணிப்பூர் பிரச்னையை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று விரும்பியுள்ளனர். தங்களது விருப்பம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதற்காக இது போன்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். பகத்சிங் ரசிகர் கிளப் என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை இவர்கள் வைத்துள்ளனர். லலித் ஷாதான் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ள கலர் பொடி தாக்குதலுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.


அவரிடமிருந்து மொபைல் போன் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அவர் அனைத்து தகவல்களையும் அழித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இச்சம்பவத்தில் வேறு இரு அமைப்புகளுக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாத தாக்குதல் போன்று இச்சம்பவம் நடந்திருந்தாலும் இதில் தீவிரவாத அமைப்பு எதுவும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கில் இதனை செய்து இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அதேசமயம் போலீஸில் சரணடைந்த லலித் ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க.குற்றம் சாட்டி இருக்கிறது. மேற்கு வங்க பா.ஜ.க.தலைவர் சுகந்தோ ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார். அதில் லலித் ஷா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com