சுரேஷ் கோபியின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளும், டி.ஒய்.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து சுரேஷ் கோபி தனது எக்ஸ் பக்கத்தில் பெண் செய்தியாளருக்கு மன்னிப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “செய்தியாளர்களிடம் நான் அன்புடன் தான் பழகி வருகிறேன். நான் என் வாழ்க்கையில் இன்றுவரை பொது இடங்களிலோ அல்லது வேறு எங்கோ அநாகரிகமாக நடந்துகொண்டதில்லை. அந்த பெண்ணின் கருத்தை நான் மதிக்கிறேன். எதாவது முறையில் அவருக்கு மோசமான தோன்றியிருந்தாலோ, மனதளவில் சங்கடம் ஏற்பட்டிருந்தாலோ நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க சார்பில் ஏற்கனவே மேல்சபை எம்.பி-யாக இருந்தவர். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக முயன்று வருகிறார். இதுகுறித்து கருத்துதெரிவித்த பா.ஜ.க நிர்வாகி ஷோபா சுரேந்திரன், “சுரேஷ் கோபியின் இமேஜை டேமேஜ் செய்வதற்கு சி.பி.எம் கட்சியின் அமைச்சர் முகம்மது ரியாஸ் பின்னால் இருந்து தூண்டிவிடுகிறார். அது எங்களுக்கு நன்றாகவே தெரியும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com