“செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கும் சப்போர்ட் என்றே தலைமை அதை நினைக்கிறது” என்றபடி பேச்சைத் தொடர்ந்தார் சீனியர் அமைச்சர் ஒருவர். “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கு அ.தி.மு.க காலத்தில் போடப்பட்டது என்றாலும் இப்போது அவர் தி.மு.க அரசின் அங்கம். தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் பா.ஜ.க தரப்பிலிருந்து வந்த பல்வேறு விமர்சனங்களைத் தைரியமாக எதிர்த்தவர் செந்தில் பாலாஜி. அதுமட்டுமல்ல, ஈரோடு இடைத்தேர்தல் தொடங்கி, உள்ளாட்சி, நகராட்சி தேர்தல்கள் என அனைத்துத் தேர்தல்களிலும் செந்தில் பாலாஜியின் வேலை அசாத்தியமானது.
அதைத் தி.மு.க தலைமை எப்போதும் மறக்காது. அதுமட்டுமல்ல, அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கினால் அவருக்கு நெருக்கடிகள் அதிகமாகும். அது, அரசுக்கும் தி.மு.க தலைமைக்கும் நெருக்கடியை கொடுக்கும் என நினைக்கிறார்கள். எனவேதான் இப்போதும் அமைச்சராக அவரைத் தொடராச் செய்திருக்கிறது தலைமை. அவரின் இலாகாக்களைக் கவனிக்கும் அமைச்சர்களிடமும் செந்தில் பாலாஜி வரும் வரை இதைக் கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லித்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றவரிடம், `அப்போ பொன்முடி?’ எனக் கேள்வியை நாம் முடிக்கும் முன்பே நம்மைத் தடுத்தவர்…


“பொன்முடி விவகாரத்தில அவர் குற்றவாளி என உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவருக்கு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்குத் தடை வாங்கினால் அவருக்கும் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படும். ஆனால், முன்பு கவனித்த பொறுப்பே வழங்கப்படுமா என்பது அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க கூடியதாக இருக்கும் ” என முடித்துக்கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com