லதா ரஜினிகாந்த் மீதான வழக்கு; மீண்டும் விசாரணைக்கு எடுக்க

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை’ எனக் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டம் 196 (போலி ஆவணம்), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஆதாரங்களைத் திரித்துத் தாக்கல் செய்த பிரிவுகளின்கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை நீதிமன்றத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் 3 பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக ஆட்-ப்யூரோ நிறுவனமும், பெங்களூரு நீதிமன்ற விசாரணைக்கு எதிராக லதா ரஜினிகாந்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களையும் ஏற்று விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “லதா ரஜினிகாந்த் வழக்கை மீட்டெடுக்கிறோம் (மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறோம்). இந்த வழக்கு தொடர்பாக, விசாரணை நீதிமன்றத்துக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது.

மேலும் இரு தரப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைக் கருத்தில்கொண்டு, மனுதாரர் – குற்றம்சாட்டப்பட்டவர் ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகத் தேவைப்படும்போது, ஆஜராக வேண்டும். இந்த வழக்கின் நிலை குறித்து நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, மத்தியஸ்தர்கள் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கப்படுகிறது” என உத்தரவிட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *