பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரை செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய பா.ஜ.க அரசு கூறியது. மத்தியப்பிரதேசம் உட்பட தற்போது நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலுடன் சேர்த்து ஜம்மு காஷ்மீருக்கும் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அங்கு தேர்தலை நடத்த மத்திய அரசு ஆர்வம் எதுவும் காட்டவில்லை.
‘ஜம்மு காஷ்மீர் மக்கள் பா.ஜ.க மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் எங்கு தேர்தல் நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. தற்போது 2024-ல் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிருப்பதால், வரும் ஆண்டில் அங்கு தேர்தல் நடத்தப்படலாம். சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும், மீண்டும் மாநில அந்தஸ்து தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் கட்சிகளின் போராட்டம் தொடரும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
