
மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலையை ஏற்க மறுத்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போரட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பேரணியாக வந்த விவசாயிகள் அரியானா மாநிலத்தின் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீசார் அந்த எல்லைகளை தாண்டி வராதவாறு பலமான தடுப்புகளை அமைத்து உள்ளனர். இதனால் விவசாயிகள் அங்கேயே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட முயன்றனர். போலீசார் அமைத்த தடுப்புகளை நோக்கி வந்த போது, கண்ணிர் புகை குண்டுகளை வீசி போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். அடுத்தகட்ட முயற்சியாக விவசாயிகள் தங்களிடம் உள்ள ஜே.சி.பி மற்றும் பொக்லைன் மூலம் பேரிகார்டுகளை உடைத்து முன்னேறலாம் என தெரிகிறது. அதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இத்தகைய இயந்திரங்கள் கொண்டு பேரிகார்டுகளை உடைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனை சமாளிக்க எராளமான போலீஸ் மற்றும் துணை இராணுவத்தினர் தயராக உள்ளனர்.
ALSO READ : IDBI பேங்க்ல வேலை வாய்ப்பு அறிவிப்பு – இந்தியா முழுவதும் பணியாற்றலாம்
பாதுகாப்பு குறித்து அரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து டி.எஸ்.பி.களும் பாதுகாப்பு பணியில் தான் உள்ளனர். பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். அதனால் உள்ளே நுழைந்து சட்ட ஒழுங்கை சீர்குலைக்க நினைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் எந்த சூழ்நிலையும் எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.
மக்கள் பீதி அடையாமல் சமூக ஊடகங்கள் மற்றும் நாளிதல்கள் போக்குவரத்து வழிகட்டுதலின் படி மக்கள் பயணங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இது ஒருபுறம் இருக்க பஞ்சாப் மாநில மந்திரி பல்பீர் சிங் விவசாயிகளை டெல்லிக்கு சென்று அமைதியாக போராட அனுமதிக்கும் படி அரியான அரசு மற்றும் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in