தனியார் தொலைக் காட்சி ஒன்றில் தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுஉள்ளது. இந்நிலையில் அக்டோபர் எட்டாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் முதல் வாரத்தில் எந்த போட்டியாளர் எலிமினேஷன் ஆகா போகிறார்? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் அவர்கள் ஒரு போட்டியாளருக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் வன்முறையை தூண்டுபவர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்து வந்த நிலையில், தற்போது இந்த சீசனில் முதல் முறையாக ஒரு குறிப்பிட்ட போட்டியாளருக்கு மஞ்சள் கார்ட்( ஸ்ட்ரைக் கார்ட்)வார்னிங் கொடுத்து உள்ளார் கமல்ஹாசன்.
அதனை தொடர்ந்து மக்களை கவர்ந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 கடந்த ஞாயிற்று கிழமை முதல் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீசனின் முதல் வாரத்திலேயே ஏழு போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் முதல் வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேறப் போகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே நிலவி வரும் நிலையில், வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் கடைசி இடத்தில் இருக்கும் அனன்யா என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஒரு சில தகவலின் படி நடிகர் யுகேந்திரன் அவர்களும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார். இந்த தகவல்கள் உறுதி இல்லாத நிலையில் தற்போது இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அந்த ப்ரோமோவில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், பிரதீப் அவர்கள் தன் மீது செருப்பு காலோடு உரசி விட்டு சென்றார். அப்போது நான் அவர் முகத்தில் கோபப்பட்டு இடித்து இருந்தால் அவருடைய முகம் உடைந்து போய் இருக்கும் என்று கூறி உள்ளார். மேலும் அடித்திருந்தால் மூக்கு உடைந்து போயிருக்கும் என்றும் தன்னை நேசிக்கும் பலர் வெளியே இருக்கிறார்கள் என்றும் கூறி இருந்தார். அதை தொடர்ந்து பிரதீப் வெளியே சென்றால் அவருக்கு என்ன வேணாலும் ஆகலாம் என்றும் மிரட்டடி உள்ளார். இதனை பற்றி இன்றைய முதல் ப்ரோமோவில் கமல் அவர்கள் நீங்கள் முழங்கையை வச்சி இடிச்சா மூக்கு வாய் உடைந்து விடும் மேலும், எனக்கு வெளியே ஆள் இருக்கு என்று நீங்க சொன்னீங்க என்று கமல் கூற நான் அப்படி சொல்லல என்று விஜய் மழுப்பினார். அதற்கு கமல் தங்களிடம் குறும்படம் இருக்கிறது என்று கூறியதும் உடனே விஜய் ஆமாம் என்று தலையை அசைத்தார்.
Also Read : திருப்பதி கோவிலுக்கு போறீங்களா? அப்போ கண்டிப்பா இந்த செய்திய படிச்சிட்டு போங்க..! இல்லனா அவ்வளவுதான்…
மேலும் இந்த வன்முறை பேச்சிக்கு தன்னுடைய கண்டனம் என்று மஞ்சள் கார்டு( ஸ்ட்ரைக் கார்ட்) ஒன்றை காட்டினார். இந்த கார்டை மீண்டும் மூன்று முறை வாங்கிட்டீங்கன்னா என் கூட வந்து பேசிட்டு மகிழ்ச்சியுடம் நீங்க கிளம்பி போய்கிட்டே இருக்கலாம் என்று எச்சரித்தார். ரசிகர்கள் பலரும் இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.மேலும் சரவணன் பேசியதற்கு உடனடியாக ரெட் கார்ட் வழங்கிய நிலையில் விஜய்க்கு ஏன் வழங்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.விஜய்க்கு கொடுக்கப்பட்ட இந்த ஸ்ட்ராய்ட் கார்டு பார்த்து மற்ற போட்டியாளர்களும் ஆட்டத்தை குறைத்துக் கொண்டால் நல்லது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
நன்றி
Publisher: jobstamil.in