’படிப்பு முக்கியம் இல்லையா’..? ’ஏம்மா ஜோவிகா.. அண்ணன் பேசுறதையும் கொஞ்சம் கேளும்மா’..!!

’படிப்பு முக்கியம் இல்லையா’..? ’ஏம்மா ஜோவிகா.. அண்ணன் பேசுறதையும் கொஞ்சம் கேளும்மா’..!!

பிக்பாஸ் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் நடிகை விசித்ராவும், வனிதா மகள் ஜோவிகா விஜயகுமாரும் கல்வி பற்றி விவாதித்துக் கொண்டது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆகி உள்ளது. இதில், ஜோவிகாவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிறதோ அதே அளவுக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. ஜோவிகா தனக்கு படிப்பு வராததால் அவருக்கு பிடித்ததை செய்கிறார் அதில் என்ன தவறு இருக்கிறது என ஒருதரப்பினர் கூறினாலும், இதை எதிர்ப்போர் சொல்வதிலும் நியாயம் இருக்க தான் செய்கிறது.

ஜோவிகா, வசதியான வீட்டு பெண், அவர் படிக்கவில்லை என்றால் அவரது பெற்றோரால் அதை சமாளித்துக் கொள்ள முடியும். ஆனால், ரியாலிட்டியில் படிப்பு வரவில்லை என்று ஒரு மிடில் கிளாஸ் பொண்ணையோ பையனையோ நிறுத்திவிட முடியாது. அவன் படித்தால் தான் அவனது குடும்பம் அடுத்த நிலைக்கு செல்லும். விசித்ரா சொன்னது அடிப்படை கல்வி அவசியம் என்பது தான். அது உண்மையும் கூட என பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இருவரின் மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் நீயா நானா கோபிநாத்தின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “படிக்காதவன் தான் சாதித்திருக்கிறான் என்று சச்சின், பில்கேட்ஸ், காமராஜர் என ஒரு 10 பேரை சொல்லுவார்கள். 11-வது ஒரு ஆளை சொல்ல சொல்லுங்க பார்ப்போம். ஏன்னா எவனும் கிடையாது. படிக்காம ஜெயிச்ச 10 பேரை நீங்க சொன்னா, படிச்சு ஜெயிச்ச 10 லட்சம் பேரை நான் சொல்லுவேன். படிப்பு ரொம்ப முக்கியம்.

உங்களை திசை திருப்புறாங்க. கல்வி தான் முக்கியம். எழுதி வச்சிக்கோங்க இன்னும் ஒரு வருஷத்துல நீட் தேர்வுல நம்ம பையன் தான் டாப்ல வருவான். படிக்காம ஜெயிச்சவங்க லிஸ்ட்ல நம்ம பர்ஸ்ட் சொல்றது காமராஜரை தான். அவர் படிக்காதவராக இருந்தாலும் அவர் ஏன் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். படிக்காத என்னாலயே இவ்ளோ செய்ய முடியுதே படிச்சவர்களால் என்னென்ன செய்ய முடியும் என்று காமராஜர் கண்ட கனவினால் தான் இன்று இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள்.

வறுமையில் இருந்தாலும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்குற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். படிப்பு என்பது மார்க் சம்பந்தப்பட்டது அல்ல. படிப்பு தான் சமூக நீதியை சொல்லிக் கொடுத்திருக்கிறது. படிப்பு ஒரு ஆயுதம்” என கோபிநாத் ஆக்ரோஷமாக பேசிய பேச்சு தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்த மோதலுக்கு தக்க பதிலடியாக இருப்பதாக நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

வீடியோவை காண:

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *