அந்த இடத்தில் கேமரா வைத்து கண்காணித்த இளைஞர்…..! மனம் உடைந்து பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு, இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!

அந்த இடத்தில் கேமரா வைத்து கண்காணித்த இளைஞர்…..! மனம் உடைந்து பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு, இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!

குளியல் அறையில், ரகசியமாக கேமரா வைத்து, குளிப்பதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பள்ளி மாணவி ஒருவரை, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரால், மனம் உடைந்த மாணவி, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இருக்கின்ற பகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், ஒரு வருடத்திற்கு முன்னர் லக்சாம்பூரில் இருக்கின்ற தன்னுடைய தாத்தா வீட்டில், தங்கி படித்து வந்தார். என்சிசியில் சேர்ந்துள்ள அந்த மாணவி, காலையில் ஓட்ட பயிற்சிக்காக சென்றுள்ளார்.

அதன் பிறகு, அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தியபோது, ராமகங்கா கால்வாயில் அந்த மாணவி விழுந்ததாக தெரியவந்துள்ளது. இதனால், அந்த மாணவியை தேடும் பணி நடந்து வந்தது. இதற்குப் பிறகு, அவருடைய உடல் மீட்கப்பட்டது.

ஆனால், தொடக்கத்தில் அந்த மாணவி கால்வாயில் தவறி விழுந்து விட்டதாக கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவியின் தந்தை பித்னு காவல் நிலையத்தில் புகார் வாங்கி இருக்கிறார். அதாவது, தன்னுடைய அண்டை வீட்டைச் சேர்ந்த சிவம் என்ற நபரால் தான், தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தந்தை தெரிவித்ததாவது, என்னுடைய மகள் குளிக்கும்போது, மேற்கூறையில் ரகசிய கேமரா ஒன்றை வைத்து, படம் எடுத்து, அதனை வைத்து, சிவம் என்னுடைய மகளை மிரட்டி இருக்கிறார். மேலும், சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று தெரிவித்து, என்னுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவும் வழங்கியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

அதாவது, சிவம் குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி என்னுடைய மகள் இதுகுறித்து, புகார் வழங்கினார். ஆனாலும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், என்னுடைய மகளையும், எங்கள் குடும்பத்தையும் அவமதித்து பேசி இருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த என்னுடைய மகள், கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருக்கிறார்.

காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தியபோது, மாணவியின் தாய் வழி தாத்தா வீட்டின் மேல் கூரையில் ரகசிய கேமராவை வைத்து, சிவம் வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, மாணவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த சிவத்தின் குடும்பத்தினர் மீது, வழக்கு பதிவு செய்து சிவத்தை நேற்று கைது செய்து இருக்கிறார்கள். அவரிடம் தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது. மேலும், இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *