
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL) நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த BEL நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL) நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பயிற்சி பொறியாளருக்கான(Trainee Engineer) பணியிடம் காலியாக உள்ளதாவும், இதற்கென மொத்தம் 47 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/B.Tech படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது 28 வரை இருப்பவர்கள் மட்டுமே இவ்வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 வரை மாதம் சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் ரூ.177 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேற்கண்ட பணிகள் குறித்த மேலும் விவரங்களை அறிய BEL Official Notification என்ற லிங்கையும், இந்த வேலைக்கு தகுதியுடையவராக இருந்து விண்ணப்பிக்க விரும்பினால் BEL Application Form என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in