சென்னை வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண நிதியில், குறைவான நிதியையே மத்திய அரசு கொடுத்திருக்கிறது. தற்போது, தென் மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, கூடுதலாக நிவாரண நிதியை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்போது, கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்காக முதல்வர் டெல்லிக்குப் போவது நியாயமா என்று ஸ்டாலினுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டன. தி.மு.க தரப்போ, ‘வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அமைச்சர் உதயநிதியும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் களத்தில் இருந்து மீட்பு, நிவாரணப் பணிகளைக் கவனித்துக்கொள்கிறார்கள்’ என்று விமர்சனங்களுக்கு பதில் சொல்லிவருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com