சற்றுமுன்: நிலவில் தரையிறங்கும் போது லேண்டர் எடுத்த புதிய புகைப்படம் வெளியீடு…

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இந்த வெற்றியால் நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கனேவே அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டருக்கும் தரைக்கட்டுப்பாட்டிற்கும் தகவல் தொடர்பு நிறுவப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது, மேலும் நிலவில் தரையிறங்கும் போது சந்திராயன்-3 லேண்டர் எடுத்த புதிய புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இது குறித்த இஸ்ரோவின் பதிவில் “Ch-3 லேண்டர் மற்றும் MOX-ISTRAC, பெங்களூரு இடையே தொடர்பு இணைப்பு நிறுவப்பட்டுள்ளது. லேண்டர் கிடைமட்ட வேகக் கேமராவில் இறங்கும் போது எடுக்கப்பட்ட படங்கள் இதோ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *