மேலும் மாதவிடாய் நபர்களின் நடமாட்டம், சுதந்திரம் மற்றும் சாதாரண நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது பல நேரங்களில், துன்புறுத்தலுக்கும் சமூக விலக்கலுக்கும் வழிவகுக்கிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைஅமைச்சகத்துடன் கலந்தாலோசித்து மாதவிடாய் சுகாதார வரைவுக் கொள்கை வகுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
10-19 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே கொண்டுவந்திருக்கிறது. பணியில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன்கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஆண்டுக்கு 10 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கின்றன.
நன்றி
Publisher: www.vikatan.com