சைலண்டா விலை ஏத்திட்டாங்களே… இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே! அதிருப்தியில் மக்கள்…!

Today Latest News in Tamilnadu

Today Latest News in Tamilnadu
சைலண்டா விலை ஏத்திட்டாங்களே… இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே! அதிருப்தியில் மக்கள்…! 2

பால் என்றாலே ஆவின் பால் தான் நம் நினைவிற்கு வரும். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக திகழுவது தான் ஆவின் நிறுவனம். இந்நிறுவனம் பாலை விவசாயிகளிடம் நேரடியாவே கொள்முதல் செய்து மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்கிறது. கடந்த இரண்டு ஆண்டு கால அளவில் ஆவின் பால் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது. அதாவது பால் விற்பனை விலையை நேரடியாக உயர்த்தாமல் தற்போது மறைமுகமாக 8 ரூபாய்க்கு விற்பனை செய்கிறதோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு வந்துள்ளது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்…

கேட்பதற்கு யாரும் இல்லை என்றல் ஆவின் நிறுவனம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். கடந்த சில மாதங்களுக்கு முன்பே நீல நிற பாக்கெட்டில் “செரிவூட்டப்பட்ட பசும்பால்” அக்டோபர் 1 ஆம் தேதி முதல் எந்தவொரு முன்னறிவிப்பு இன்றி நிறுத்தி விட்டு, “டிலைட் பால்” என்கிற பெயரில் ஊதா நிற பால் பாக்கெட்டை அறிமுகம் செய்தது.

Also Read >> கவர்மெண்ட் வேலை பார்க்கும் ஊழியர்களே… இந்த குட் நியூஸ் உங்களுக்குத்தான்! என்னானு உடனே பாருங்க…!

மேலும், 4.5%கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநோயோகத்தை அக்டோபர் 1 ஆம் தேதியில் எந்த அறிவிப்பும் இல்லாமல் குறைத்து விநியோகம் செய்தது. மொத்த விநியோகஸ்தர்கள் வாயிலாக பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 4.5% கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையையும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 50% குறைத்ததால் பால் முகவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் அதிக விலை கொடுத்து பாலை வாங்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது, பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு மாறாக ஊதா நிற பால் பாக்கெட்டின் பின் புறம் Toned Milk (சமன்படுத்தப்பட்ட பால்) என குறிப்பிட்டுள்ளதால் பொதுமக்களையும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தையும் ஆவின் நிறுவனம் ஏமாற்றுகிறது என தெளிவாக தெரிகிறது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளின் படி பசும்பாலில் 3.5%கொழுப்பு சத்தும், 8.5% திடசத்தும் இருக்க வேண்டும். சமன்படுத்தப்பட்ட பாலில் 3.0%கொழுப்பு சத்தும், 8.5% திடசத்தும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது செரிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகப்படுத்திய பின், அதனை டிலைட் பால் என மாற்றி உள்ளது. மேலும் ஏற்கெனவே உள்ள நீல நிற பால் பக்கெட்டில் Toned Milk (சமன்படுத்தப்பட்ட பால்) விற்பனையில் இருக்கும் போதே தற்போது ஊதா நிற பக்கெட்டில் Toned Milk (சமன்படுத்தப்பட்ட பால்) என பாக்கெட்டின் பின்புறம் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஆவின் நிறுவனம் மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபடுகிறது என இவை உறுதி செய்கிறது.

எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும். அத்துடன், மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டுகளை தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *