பெண்களின் சேமிப்பு திட்டங்களில் தங்கமும் ஒன்று. கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து நகையை வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்கு பிடித்தமான ஒரு செயல். ஆனால் தற்போது விற்கும் தங்கத்தின் விலையை கேட்டால் மக்களுக்கு தங்கம் வாங்குவது என்பது மிகப்பெரிய விசியமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்துகொண்டே சென்றது.

ALSO READ : பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? கவர்மெண்ட் பஸ்ல டிக்கெட் புக்கிங் தொடங்கியாச்சு!
எனவே மக்கள் தங்கத்தின் விலை குறைகிறது இன்னும் குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி. இன்று தங்கத்தின் விலை திடிரென உயர்ந்துள்ளது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியாக தான் உள்ளது. அதன் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 960 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 46,560- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 120 அதிகரித்து ரூ. 5,820 க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2.50 உயர்ந்து ரூ. 79.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in