இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் லியோ. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்டுகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது, குறிப்பாக என் நெஞ்சில் குடியிருக்கும் என்று தொடங்கி தளபதி விஜய் என்ன சொல்லப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ஏனென்றால் ஒருபக்கம் சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனை, மறுபக்கம் அரசியல் தொடக்கம் என்று பரபரப்புக்கிடையே விஜயின் பேச்சுக்கு எதிர்பார்த்தனர், அவர்களுக்கு எல்லாம் ஏமாற்றம் தரும் வகையில் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அது என்னவென்றால் லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில்,அதிக டிக்கெட் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி புதுப்பிப்புகளுடன் உங்களை உற்சாக படுத்துவோம். மேலும் இது பலர் நினைப்பது போல், அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com