கடந்த மே மாதம் சரத் பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது வெறும் கண்துடைப்பு ஆகும். அது ஒரு நாடகம் என்றே பலரும் நினைத்தனர். பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு ஜிதேந்திர அவாட் மற்றும் ஆனந்த் பராஞ்பேயை அழைத்து பெண்கள் மற்றும் தொண்டர்களை அழைத்து வந்து என்னிடம் ராஜினாமாவை திரும்ப பெறும்படி கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். பதவியை திரும்ப பெறுவதாக இருந்தால் ஏன் ராஜினாமா செய்யவேண்டும். முதலில் ராஜினாமா செய்த போது, எனது சித்தப்பாதான்(சரத் பவார்) பா.ஜ.க. கூட்டணி அரசில் சேரும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். இது வெளியில் தெரியாது. ஆனால் பின்னர் ராஜினாமா முடிவை திரும்ப பெற்றுக் கொண்டார்” என்றார்.


அஜித் பவாரின் இந்த கருத்து மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சரத் பவார் தன்னை மதசார்பற்ற தலைவராக அறிவித்துக் கொள்வதோடு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அஜித் பவார் இப்போது தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. ஏற்கனவே தொகுதி பங்கீடு தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டணியில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com