குற்றப்பத்திரிகையில் 900 பேர்: `இப்போதைக்கு இந்த வழக்கு

அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்தால், அந்த சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்டு, பதிலை பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அத்தனை பேரும் ஆஜராகியிருக்க வேண்டும்.

இந்த நடைமுறை முடிந்து விட்டால், அடுத்து எதிர்தரப்பு சாட்சி விசாரணை தொடங்கும். 900 பேரும் தங்கள் தரப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சாட்சிகளை விசாரிக்க கோரலாம். அவர்களில் எத்தனை பேரை விசாரிப்பது என நீதிமன்றம் முடிவு செய்யலாம். இந்த விசாரணையும் முடிந்து விட்டால், அடுத்து வழக்கறிஞர்கள் தரப்பு இறுதி வாதம் நடைபெறும். அதன்பின் இறுதியாக வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும். அந்த தீர்ப்பு நகல் முழுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 

செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

250 பேருக்கு எதிரான வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில், 1996 ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 2011 ம் ஆண்டு அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகே கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் செந்தில் பாலாஜி வழக்கு இப்போதைக்கு எல்லாம் முடியாது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

900 பேருக்கு எதிராக விசாரணை நடத்துவது என்பது, வழக்கை நீர்த்துப் போகச் செய்து விடும். அரசியல் ரீதியாக இது வழக்கை இழுத்தடிப்பதற்காக செய்யும் முயற்சி எனவும் இது செந்தில் பாலாஜிக்கு சாதமாக அமையும் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், இது செந்தில் பாலாஜிக்கு பாதகமாகவே அமையும் என்றே நான் கருதுகிறேன். பல ஆண்டுகள் வழக்கு நடைபெற்றால் அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் வாய்ப்புள்ளது.” என்றார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *