திருச்சியில் “வென்றாக வேண்டும் தமிழ்’ என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
சீமான், “`வென்றாக வேண்டும் தமிழ்’ எனும் முழக்கத்தை முன்வைத்து நான் திருச்சியில் உரையாற்றக் காரணம், இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னசாமி அவர்கள் வாழ்ந்தது திருச்சி மண்ணில்தான்.
முன்னவர்கள் பின்னவர்களுக்கு வைத்து விட்டு போகும் உயிர், உடைமை மொழிதான். மொழி தான் ஒரு தேசிய இனத்தின் முகவரி. உலகத்தில் எந்த இடத்திற்கு சென்றாலும் நான் தமிழன்தான். “எழுதுங்கள் என் நெற்றியில் நான் இஸ்லாமியன்” என்று என ரசூல் கம்சதோவ் கூறவில்லை. “எழுதுங்கள் என் நெற்றியில் நான் அரேபியன் என்று” எனதான் கூறினார். ஆகவே எல்லோருக்கும் மொழி தான் அடையாளம்.
தாய் நிலத்தை இழந்தால் கூட வேறு நிலம் பெற இயலும். ஆனால் தாய் மொழியை இழந்துவிட்டால் வேறு வழி இல்லை. தமிழ் எங்கள் பேச்சு மொழியல்ல, மூச்சு மொழி. ஏனைய மொழிகள் மனிதனால் பேசப்பட்டது. ஆனால் தமிழ் தான் இறைவனால் பேசப்பட்டது. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்னும் தமிழ்ப் பாடலை எழுதியது இறையனார் என்று இலக்கியங்களில் இருக்கிறது. இறையனார் என்றால் சிவன். சிவனின் பேரன் நான். நக்கீரனின் தமிழோடு விளையாடிய என் பாட்டன் சிவன்.
நன்றி
Publisher: www.vikatan.com