நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலக்ஷ்மி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகை விஜயலக்ஷ்மி, சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார். அப்போது சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி காத்தோம். 2011 ஆம் ஆண்டி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது என்னை மிகவும் கேவலப்படுத்தி வருகிறார். மேலும் எனக்கு ஒரு கோடி தந்ததாக மதுரை செல்வம் தெரிவித்திருப்பது சுத்த பொய் என்று கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் என்னிடம் மட்டுமே விசாரணை நடித்தினார்கள் என்றும் நடிகை கூறினார். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள் என்று அழுதுகொண்டே கூறினார் விஜயலக்ஷ்மி.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதை எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். இவர்கள் தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறினார்.
நன்றி
Publisher: 1newsnation.com