அண்ணாமலை மீது சீமான் வைத்துவரும் விமர்சனம் குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். அதற்கு அவர், “அ.தி.மு.க குறித்து சீமான் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தி.மு.க அரசுதான். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது சி.பி.ஐ வழக்கு ஏற்கெனவே பதியப்பட்டிருக்கிறது. மற்றபடி, பா.ஜ.க மீது சீமான் முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்றார் நாராயணன் திருப்பதி.
முன்னதாக, நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், சீமான் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “‘திமுக மீது பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுகிறது. ஏன் அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடவில்லை.’ என சீமான் கேட்கிறார். அதிமுக ஊழல் பட்டியலை சீமான் வெளியிடட்டுமே. நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம். அதில் குறைகள் சொல்லலாம். ஆனால் சீமான் ஏதாவது வெளியிட்டுள்ளாரா என்பது தான் கேள்வி.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com