அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் 2022 பட்டம் பெற்று மருத்துவரான சவேரா பிரகாஷ் தொடர்ந்து சமூகப் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இது குறித்து உள்ளூர் அரசியல் கட்சித் தலைவர் சலீம் கான்,”புனரிலிருந்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் பெண் சவேரா பிரகாஷ்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தன் அரசியல் பயணம் குறித்துப் பேசிய சவேரா பிரகாஷ், “எனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன். சமூகத்தின் நலனுக்கான எனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவேன்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யவும், அவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதுமே எனது இலக்கு. வளர்ச்சியில் பெண்கள் வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்படுவதையும் ஒடுக்குவதையும் முற்றிலுமாக மாற்ற வேண்டும். எனது தந்தை ஓம் பிரகாஷ் போலவே, பின்தங்கிய மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நான் மருத்துவப் பின்னணி கொண்டவள் என்பதால், மனிதக்குலத்திற்குச் சேவை செய்வதில் அர்ப்பணிப்பு என் இரத்தத்தில் உள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com