மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் முன்னிலையில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்த சிறைத்துறை டிஐஜி பழனி பேசும்போது, “தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் சிறைவாசிகளை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிறைவாசிகள் சீர்திருத்தப் பணியில் தமிழ்நாடு அரசும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.


ஒரு தவறு செய்து சிறைக்கு சென்று வந்த பின், தாங்கள் செய்த தவற்றை உணர்ந்து மீண்டும் தவறு புரியாவண்ணம் அவர்களுக்கு நல்லொழுக்கங்களும், அவர்களது வாழ்வாதாரத்திற்குத் தேவையான தொழில் பயிற்சிகளும், கல்வி அறிவும் பெற பல்வேறு வகையான திட்டங்களை சிறைத் துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி செயல்படுத்தி வருகிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறைவாசிகளின் குடும்பத்தாரும், சிறைவாசியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரும் பயன்பெறும் வகையில் இந்த தீபாவளியில் பொதுமக்கள் அதிகம் வாங்கும் பொருள்களான ஆடைகள், இனிப்பு, கார வகைகள் விற்பனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிறைவாசிகளின் தயாரிப்புப் பொருள்களை அதிகளவு வாங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டினை அவர் மேற்கொண்டுள்ளார்
நன்றி
Publisher: www.vikatan.com