உதயநிதியின் பேச்சு பொதுமக்கள் மத்தியில் பாதகத்தை ஏற்படுத்தியிருப்பதால்தான் I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களே கொதிக்கின்றனர். I.N.D.I.A கூட்டணியை நம்பி வந்த ஒருசில மக்களும் பா.ஜ.க பக்கம் திரும்பிவிட்டனர், தேர்தலுக்கு முன்பே முரண்பட்ட கருத்துகளால் I.N.D.I.A கூட்டணி உடைந்தே போகும், ஏற்கெனவே நல்ல மைலேஜில் இருக்கும் பா.ஜ.க-வுக்குக் கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது உதயநிதியின் பேச்சு” என்கிறார்கள்.


“ஓரிரு நாள்களில் மறைந்துபோகும் டாபிக்காக சனாதன விவகாரம் இல்லை. `ஆட்சியே போனாலும் பரவாயில்லை’ எனப் பேசி அதிரடித்துக்கொண்டிருக்கிறார் உதயநிதி. தொடர்ச்சியாக தி.மு.க-வும் உதயநிதியும் சனாதன ஒழிப்பைப் பேசிக்கொண்டிருந்தால் ’இந்துக்களுக்கு எதிரானது I.N.D.I.A கூட்டணி’ என அடையாளப்படுத்தி அரசியல் ஆதாயத்தை பா.ஜ.க. தேட முற்படும் என்பதில் சந்தேகமில்லை.
தேசிய அரசியலில் பாஜக-வுக்கு இந்தச் சர்ச்சை மைலேஜ் அளிக்கலாம். அதேநேரத்தில், தமிழகத்தில் இந்த விவகாரம் உதயநிதிக்கு நல்ல மைலேஜ் அளித்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. சொல்லப்போனால் இந்தியா கூட்டணிக்குள் இப்படியான பேச்சுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ற தனிப்பட்ட இமேஜ் கிடைத்து, அவருக்கான பொலிடிக்கல் மைலேஜும் அதிகமாகியிருக்கிறது. சனாதன விவகாரம் தேர்தல்வரை உயிர்ப்புடன் இருந்து, I.N.D.I.A கூட்டணிக்குச் சிக்கலை ஏற்படுத்துமா என்பதை அறிய, பொறுத்திருப்போம்” என்கிறார்கள் தேசிய அரசியல் நோக்கர்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com