“பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள், அடக்குமுறைகள் போன்றவை நிறைந்தவைதான் சனாதன தர்மம்” என்று எதிர்க்கட்சிகள் பல நாள்களாகக் கூறிவருகின்றன. ஆனால், சனாதன தர்மத்தாலே எதிர்காலத்தில் இந்தியா வல்லரசாகும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் உட்பட பல வலதுசாரி தலைவர்கள் கூறிவருகின்றனர்.

இத்தகைய சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொரோனா, டெங்குபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு, தி.மு.க-மீதும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின்மீதும் ஆர்.எஸ்.எஸ், வலதுசாரி அமைப்புகள், ஆளும் பா.ஜ.க ஆகியவை கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தன.
இந்த நிலையில், “சனாதனம் தாக்கப்பட்டால் மனித குலத்துக்கே நெருக்கடி ஏற்படும்” என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். முன்னதாக, கோரக்நாத் கோயிலில் நடைபெற்ற ‘ஸ்ரீமத்பகவத் கதா ஞான’ யாகத்தின் நிறைவுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய யோகி ஆதித்யநாத், “இந்த உலகில் ஒரேயொரு மதம் மட்டுமே இருக்கிறது. அதுவே சனாதன தர்மம். மற்றவையெல்லாம் வெறும் வழிபாட்டு முறைகள். அதுமட்டுமல்லாமல், சனாதன தர்மம் என்பது மனித குலத்தின் மதம். எனவே, சனாதன தர்மம் தாக்கப்பட்டால், உலகம் முழுவதும் மனித குலத்துக்கே நெருக்கடி ஏற்படும்” என்று கூறினார்.
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com