நூல் வெளியிட்ட விவகாரம்; பேராசிரியருக்கு மெமோ வழங்கிய

நிர்வாக அனுமதி பெறாமல் இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் சுப்ரமணிக்கு மெமோ வழங்கியது. கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் கலாசாரத் தன்மையுடைய விவகாரங்களுக்கு எந்தவித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற விதி உள்ளது. ஆனால் பெரியார் குறித்து புத்தகம் எழுதிய பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெரியார் பல்கலைக்கழகம்பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம்

இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட இணை பேராசிரியர்மீது புகார் வந்ததின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தனிக்குழு அமைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டு இது போன்று புத்தகங்கள் வெளியிட வேண்டுமென்றால், முன் அனுமதி பெறவேண்டும்” என்றார்.

மேலும் இணை பேராசிரியர் சுப்ரமணியிடம் பேசியபோது, “நான் பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டுதான் புத்தகம் வெளியிட்டிருக்கின்றேன். என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிக்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *