இந்த நிலையில், தெலங்கானா தேர்தலில் பணத்தை இறக்குவதற்காகக் கர்நாடகாவில் காங்கிரஸ் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, “இந்தப் பணத்தை தெலங்கானாவில் நடக்கவிருக்கும் தேர்தலுக்காக அங்கு அனுப்ப காங்கிரஸ் வசூலித்திருக்கிறது.




அதேசமயம், இந்த சம்பவத்தில் பா.ஜ.க-வின் குற்றச்சாட்டை மறுத்த முதல்வர் சித்தராமையா, “எந்த மாநிலமும் பிற மாநிலங்களிடம் பணம் கேட்காது. எங்கள் பணத்தை மற்ற மாநிலங்களுக்கு வழங்க மாட்டோம். தேவையற்ற கவனத்தை ஈர்க்க பா.ஜ.க ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது” என்றார்.
அதேபோல், இதுபற்றி கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் கெம்பன்னா, “இதில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த ஒப்பந்தப் பணியிலும் ஈடுபடவில்லை. அவருக்கு விவசாயம் உள்ளிட்ட பல தொழில்கள் இருக்கிறது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com