கைப்பற்றப்பட்ட அனைத்து பணத்தையும் இன்று பாலங்கிரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) பிரதான கிளையில் டெபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “தீரஜ் சாஹுவும், அவரது தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக இதற்குப் பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற பெயரில் மக்களைச் சுரண்ட முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்யும். ஊழலுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்குப் பிரதமர் மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்பப் பெறப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், “தீரஜ் சாஹுவின் தொழிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிக அளவு பணம் பறிமுதல் செய்தது குறித்து அவர்தான் விளக்கமளிக்க முடியும். உரியப் பதிலை அவர் அளித்தாக வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com