நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத்தில் தொடங்கியது. இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளனர். இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது மொத்தம் 48 நாட்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு ஜாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடியது. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையடுத்து, நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், பாகிஸ்தான் அணி மொத்தம் 191 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி வெறும் 30.3 ஓவர்களிலே ஆட்டத்தை வெற்றி பெற்றது. கடந்த லீக் போட்டியில் ரோகித் ஷர்மா சதம் அடித்ததை போல இந்த லீக் போட்டியிலும் சதம் அடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித் சர்மா 63 பந்தில் 86 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மேலும், இந்த போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
Also Read : திருப்பதியில் இன்று கோலாகலத்துடன் தொடங்கப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம்.!
இந்த உலக கோப்பை தொடரின் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி, ஒரு நாள் போட்டியில் 300 சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர் 351 சிக்ஸர்களை பெற்று முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணிய சார்ந்த கிரிக்கெட் வீரர் 331 சிக்ஸர்களை பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில் தற்போது 300 சிக்ஸர்களை பெற்று மூன்றாம் இடத்தை ரோகித் சர்மா பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in