அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதனை தான் எடப்பாடியார் பெரிதும் எதிர்பார்க்கிறார். எந்த தேர்தலாக இருந்தாலும் தஞ்சாவூரில் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக முதல் செய்தி வர வேண்டும். எம்.ஜி.ஆர் தீயசக்தி தி.மு.கவை எதிர்த்து இந்த இயக்கத்தை தொடங்கினார். 51 ஆண்டுகளை கடந்து அ.தி.மு.க நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் மக்கள் தான். எப்போது அ.தி.மு.க ஆட்சி வரும் என மக்கள் ஏங்கி தவிக்கிறார்கள். தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. மக்களுக்கான தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

தஞ்சை தரணி காய்ந்து கிடக்கிறது. நமக்குரிய தண்ணீரை காவிரியில் பெற்றுத் தருவதற்கு தகுதியில்லாதவர் இன்றைக்கு முதலமைச்சராக இருந்து கொண்டிருக்கிறார். தண்ணீர் கேட்டு பெற வேண்டிய மாதங்களை விட்டு விட்டு இப்போது தண்ணீர் கொடு என்கிறார்கள் கர்நாடகா தர மறுக்கிறது. உரிய நேரத்தில் நம்முடைய உரிமையான கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று தராத அரசாக தி.மு.க இருக்கிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
