அந்த கேள்விகளுக்குப் பதிலளித்த ஆர்.கே.சுரேஷ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, `ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்டிருக்கும் தயாரிப்பளர் ரூசோவிடம் ரூ.15 கோடி பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, `வைட் ரோஸ்'(White Rose) என்ற திரைப்படம் எடுப்பதற்காக, தயாரிப்பாளர் ரூசோவிடமிருந்து வங்கி கணக்கு மூலமாகவும், பணமாகவும் ரூ.15 கோடி வரை பணம் பெற்றதாகவும், அந்தப் பணத்தை திரைப்பட செலவுக்கு மட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த செலவுக்கும் பயன்படுத்தியதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதையடுத்து, `வைட் ரோஸ்’ சினிமா பட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க பொருளாதார குற்றப்பிரிவு அறிவுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 13) மீண்டும் ஆர்.கே. சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை தொடர்பான அறிக்கையை வரும் டிசம்பர் 18-ம் தேதி பொருளாதாரக் குற்றப்பிரிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். அதைத்தொடர்ந்து நீதிமன்ற அனுமதியோடு ஆர்.கே. சுரேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல்துறை வட்டாரம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
