Aarudhra Case; `நாடு திரும்பினால்

சென்னை அமைந்தகரையைத் தலைமயிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாகக் கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர்மீது வழக்கு பதிவுசெய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகரும் தயாரிப்பாளரும், பா.ஜ.க-வைச் சேர்ந்தவருமான ஆர்.கே.சுரேஷுக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

ஆருத்ரா கோல்டு நிறுவனம் ஆருத்ரா கோல்டு நிறுவனம்

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதையடுத்து, பொருளாதாரக் குற்றப்பிரிவினர் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிலுவையில் இருக்கிறது.

இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகாத ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பித்தனர். இந்த நோட்டீஸை திரும்பப் பெற உத்தரவிடக் கோரி, மற்றொரு வழக்கை ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்தார்.

ஆர்.கே.சுரேஷ்ஆர்.கே.சுரேஷ்

ஆர்.கே.சுரேஷ்

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *