இந்த நிலையில், இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்றும், இங்கிருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும் கூறிவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடரவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
நாக்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், “சமூக அமைப்பில் சக மனிதர்களைப் பின்தங்கிய நிலையில் நாம் வைத்திருக்கிறோம். அவர்களை நாம் பொருட்படுத்தவுமில்லை. 2,000 ஆண்டுகளாக இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அத்தகையவர்களுக்கு நாம் சமத்துவம் அளிக்கும் வரை சில சிறப்பு சலுகைகள் இருக்கவேண்டும். அதில் இடஒதுக்கீடும் ஒன்று.


எனவே, பாகுபாடு இருக்கும் இடஒதுக்கீடு தொடரவேண்டும். அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து நாங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம். மேலும், இடஒதுக்கீடு என்பது வெறுமனே பொருளாராதர அல்லது அரசியல் சமத்துவத்தை உறுதி செய்வது மட்டுமல்ல, மரியாதை அளிப்பதும் கூட” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, “1950 முதல் 2002 வரை ஏன் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை” என்று மாணவர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த மோகன் பகவத், “ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) மற்றும் ஜனவரி 26 (குடியரசு தினம்) ஆகிய தேதிகளில் நாங்கள் எங்கிருந்தாலும் தேசியக் கொடியை ஏற்றுவோம். நாக்பூரிலுள்ள மஹால் மற்றும் ரெஷிம்பாக் ஆகிய இரு வளாகங்களிலும் கொடியேற்றப்படுகிறது. எனவே மக்கள் இந்தக் கேள்வியை எங்களிடம் கேட்கக் கூடாது” என்று சமாளிக்கும் விதமாக பதிலளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com