Religious Harmony Equality Ganesha Chaturthi Festival

கடந்த 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதை தொடர்ந்து சென்னையில் நேற்று, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டது.
இந்நிலையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் சிலை வழிபாட்டுக்கும் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மத வேறுபாடின்றி அனைத்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பிரமுகர்கள், ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் நடந்த விநாயகர் சிலை வழிபாட்டில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Also Read >> அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!
இது போன்று ஆர்.கே.நகர் நேதாஜி நகர், 3-வது தெருவில் நடைபெற்ற சமத்துவ விநாயகர் சிலை வழிபாட்டுக்கும் துணை போலிஸ் கமிஷனர்கள் ராஜத்சதுர்வேதி, சக்திவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவிலும் ஏராளமான இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி
Publisher: jobstamil.in