இந்தப் பிரச்னை பற்றயெரிந்துகொண்டிருந்த சூழலில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலையில், 45 நாள்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மே மாதம் 30-ம் தேதி இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு சர்வதேச மல்யுத்த சம்மேளனம் கடிதம் எழுதியது. அப்படி தேர்தல் நடத்தப்படாவிட்டால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 4-ம் தேதி, ஜூலை 11-ம் தேதி என தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு, ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் சொல்லப்பட்டது.

இதற்கிடையில், தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து ஹரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கத்தினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், ஆகஸ்ட் 28-ம் தேதி வரை இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்தச் சூழலில், திட்டமிட்டபடி தேர்தலை நடத்தாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை சர்வதேச மல்யுத்த சம்மேளனம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. இதனால், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இந்தியக் கொடியின் கீழ் பங்கேற்க முடியாத துயர நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமைக்கு காரணம் மத்திய அரசுதான் என்று பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள் தரப்பு குற்றம்சாட்டுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
