தன் பாலின திருணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனு மீது 4 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நான்கு நீதிபதிகள் நான்கு விதமான தீர்ப்புகளை வழங்கியதாகவும், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்ததாகவும், நீதிமன்றம் சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால், சட்டத்தின் சரத்துகளைக் கையாள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ, சட்டப்பேரவைகளையோ கட்டாயப்படுத்த முடியாது. 200 ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்ட பல விஷயங்களை இன்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதி, குழந்தை திருமணம் போன்ற பல விஷயங்களுக்கு இன்று மறுப்பு தெரிவிக்கிறோம். சிறப்புத் திருமண சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனறு கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியில் இருந்து தொடா்ச்சியாக 10 நாட்கள் விசாரித்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமைலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு, தீா்ப்பை கடந்த மே 11ஆம் தேதி ஒத்திவைத்தது. முன்னதாக வழக்கு விசாரணையின்போது, ‘தன்பாலின திருமணத்துக்கு நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது, தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க முடியாது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன’ என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், ‘தன்பாலினத்தவா்களின் உண்மையான மனிதாபிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்’ என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: 1newsnation.com