வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கெட்ட செய்தி… ரிசர்வ்

இந்தியாவில் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து மே மாதம் முதல் வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியது ரிசர்வ் வங்கி.

அப்போதில் இருந்து வட்டி விகிதம் 4 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. பின்னர் சில மாதங்களாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது.

ஏற்கெனவே வட்டி விகிதங்கள் உயர்வாக இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக வட்டியை ரிசர்வ் வங்கி எப்போது குறைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால், சர்வதேச சூழல் காரணமாக வட்டி விகிதம் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி

டெல்லியில் நேற்று நடைபெற்ற கவுடில்யா பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்தா தாஸ் பங்கேற்றார். அப்போது, அவர், “வட்டியைக் குறைப்பதற்கான எந்தத் திட்டமும் இப்போது இல்லை. வட்டி விகிதம் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும். எத்தனை நாள்களுக்கு வட்டி உயர்வாக இருக்கும் என்பதை காலமும், உலக மாற்றங்களும்தான் கூறவேண்டும்.

ரிசர்வ் வங்கி கூடுதல் எச்சரிக்கையுடன் கவனமாக இருக்கிறது. தற்போதைய சூழலில் கொள்கை என்பது பணவீக்கத்தைக் குறைப்பதாகவே இருக்க வேண்டும். கடந்த 15 நாள்களில் அமெரிக்க பத்திரங்களின் வருமானம் மிக அதிக அளவுக்கு உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க பத்திரங்களின் வருமானம் உயர்வு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளை பாதித்துள்ளன.

உயர் பணவீக்கம், வளர்ச்சியில் மந்தநிலை, நிதிநிலை பாதிப்புகள் ஆகியவை உலகளவில் பெரும் சவால்களாக இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

வீட்டுக் கடன்

கடன் வாங்கியோருக்கு நிவாரணம் இல்லை:

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் கடன் போன்ற கடன்களை வாங்கியோருக்கான இ.எம்.ஐ குறையும். எனவே, ரிசர்வ் வங்கியிடம் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்குமா என வீட்டுக் கடன் வாங்கியோர் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால், வட்டி விகிதம் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துவிட்டார். கடன் வாங்கியவர்களுக்கு இது சற்று ஏமாற்றம் அளிக்கும் செய்தி என்பதுடன் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு கெட்ட செய்தியாகவும் இருக்கிறது!

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *