520 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றனர்.

மத்திய அரசிடம் முரண்பாட்டை கடைப்பிடிப்பதால், நிதியை பெற்றுத் தர முடியவில்லை, அதேபோல் அதிகாரிகளிடமும், மக்களிடமும் ஒத்து போகவில்லை, இதனால் தமிழகத்துக்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. இந்த 28 மாதங்களில் ஏழரை லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது. எந்த திட்டத்திற்கும் செலவிடப்படவில்லை. இதற்கு முதலமைச்சர் உரிய விளக்கம் இன்னும் கொடுக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக ஜாதி மதம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையில் ஆயிரம் பாராபட்சம் காட்டப்பட்டு வருகிறது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
