உங்களை தலைவராக நிலை நிறுத்திக் கொள்வதில், நீங்கள் எடுத்து வருகிற முயற்சியாகத்தான் உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது. ஆனால், அது பக்குவப்பட்டதாகத் தெரியவில்லை. அவசரகோலத்தில் அள்ளித் தெளித்ததாகத்தான் உள்ளது. அதனால்தான் உங்களுடைய பேச்சு இன்று இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. நீங்கள் எழுதிக் கொடுத்ததை வைத்து பேசினீர்களா… அல்லது சொந்தமாகப் பேசினீர்களா என்பது வேறு. ஆனால், நீங்கள் சொல்லிய அந்தச் சொல் உங்களுடைய தகுதியை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
சமூகநீதிக்கு எதிரானது என்று சொல்கிற அந்த நம்பிக்கையை காலம், காலமாக கடைபிடித்து வருகிற மக்களின் நம்பிக்கையை நீங்கள் கொச்சைப்படுத்தி பேசி, அதை ஒழிப்போம் என்று சொல்வது அந்த நம்பிக்கையை ஒழிக்கவா, அல்லது அதை கடைபிடிப்பவர்களை ஒழிக்கவா என்பதுதான் கேள்வியாக உள்ளது.


மாற்றிப் பேசி அதற்கு எத்தனை விளக்கங்கள் சொன்னாலும் உங்களுடைய ஆழ்மனதில் இருந்த அந்த கொடூர சிந்தனை வெளிப்பட்டிருக்கிறது. மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசி உங்களை தலைவராக வளர்த்துக் கொள்வதில், அவசரகோலத்தில் அள்ளித் தெளித்த அரைவேக்காட்டுத்தனமாகத்தான் உங்களுடைய பேச்சு உள்ளது.
இது போன்ற பேச்சு தொடருமானால் நாட்டில் வெறுப்புணர்வை, பகைமை உணர்ச்சியை தூண்டுகிற வகையில், வேறுபாட்டை விதைக்கின்ற வகையிலும் உங்கள் பேச்சு அமையுமானால்… ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் உங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், உங்கள் பேச்சையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com