செக்காணூரணியில் மின் மயானம் வேண்டாம் என்ற மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர், துறையின் செயலர், அமைச்சர் என அனைவரிடத்திலும் கொண்டு சென்றுள்ளேன்., அந்த மின் மயானம் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என உறுதியாக சொல்கிறேன். அப்படி ரத்து செய்யவில்லை என்றால் என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன்.
சனாதனத்தை பற்றிப் பேசும் உதயநிதி ஸ்டாலின், காவிரி தண்ணீர் தர முடியாது என சொல்கிறவனை கண்டிக்க தெம்பும், திராணியும் இருக்கிறதா? அப்படி சொன்னால் கூட்டணி உடைந்துவிடுமாம், முதலில் உங்கள் கூட்டணியின் தலைவரை மட்டும் அறிவியுங்கள், கூட்டணி சுக்குநூறுக உடைந்துவிடும், தலையில்லாத முண்டத்துக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்துள்ளீர்கள்.


520 வாக்குறுதியில் 99 சதவிகிதம் சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக சொல்கிறார்கள். அதை மக்கள் உண்மைதான் என்று சொல்லிவிட்டால் நாங்கள் தமிழ்நாட்டை விட்டே சென்றுவிடுகிறோம். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டிற்கு பின் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. `ஒரே நாடு ஒரே தேர்தல்” என பிரதமர் சொன்னதிலிருந்து ஸ்டாலின் முகத்தில் களை இல்லை. அந்த வயிற்று எரிச்சலால் அதிகாரிகள் யாரையும் மு.க.ஸ்டாலின் சந்திப்பது இல்லை.
டெங்குவால் நிறையப்பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கவில்லை, இதை முதல்வரிடம் சொல்லி உத்தரவைப் பெற அதிகாரிகளால் முடியவில்லை, ஆட்சி இப்போ போகுமோ, நாளைக்கு போகுமோ என பதற்றத்தில் இருக்கிறார். ஆக, எப்போது தேர்தல் வந்தாலும் முதல்வராக எடப்பாடியார்தான் ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றுவார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com