தி.மு.க இளைஞரணி மாநாட்டை உலக சாதனை படைக்கும் என்று மூத்த அமைச்சர் நேரு கூறுகிறார். ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளி குடும்ப வாரிசு அரசியலில்தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது.
52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, 2000 அம்மா மினி கிளினிக், 13 லட்சம் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடுகள்-ஆடுகள் திட்டம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வேலை வாய்ப்பு என இது போன்ற திட்டங்கள் மூலம் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் உலக சாதனை படைத்தார்கள். ஆனால் இன்றைக்கு மடிக்கணினி, அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை எல்லாம் ரத்து செய்து தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது.

ஸ்டாலின் நடத்திய உலக முதலீட்டார்கள் மாநாடு ஒரு நாடகம்தான். உலக முதலீட்டார்கள் மாநாடு குறித்து எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டும் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.
தி.மு.க இளைஞரணி மாநாட்டில் தமிழக உரிமைகளை மீட்கும் மாநாடாக இருக்கும் என ஸ்டாலின் கூறுகிறார். காவிரி, கச்சத்தீவு உரிமைகளை காவு கொடுத்தது யார்? .அதேபோல் முள்ளிவாய்க்காலில் 3 லட்சம் மக்கள் படுகொலைக்கு யார் காரணம் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கால் வலி காரணமாக பங்கேற்க முடியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக கூறுகிறார். இது என்ன தேச குற்றமா? ஆனால், இதை கொச்சைப்படுத்தும் வகையில், நாவடக்கம் இல்லாமல் உதயநிதி பேசியுள்ளார். இதை உதயநிதி வாபஸ் பெற வேண்டும். எங்களுக்கும் பேசத் தெரியும், ஆனால் மக்கள் முகம் சுழிப்பார்கள் என்று அடக்கத்துடன் உள்ளோம். தொண்டர்கள் எல்லாம் கொதித்து போய் உள்ளனர். ஸ்டாலின், உதயநிதிக்கு முறையாக பயிற்சி கொடுத்தாரா? என்று தெரியவில்லை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
