இந்த நிலையில், அரசு அளித்த தொகையில் திருப்தியில்லை என 12 தொழிலாளர்களும், அந்தக் காசோலையைப் பணமாக மாற்ற மறுத்திருக்கின்றனர். இதுகுறித்து, எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் குழுவுக்குத் தலைமை தாங்கிய வகில் ஹாசன், “மீட்புப் பணியில் சுரங்கத்தை துளையிடும் வேலையில் இயந்திரம் சிக்கிக்கொண்டபோது, எந்தவொரு முன் நிபந்தனையும் வைக்காமல், உயிரைப் பணயம் வைத்து இறங்கி, கைகளாலேயே துளையிட்டோம்.


முதலமைச்சரின் இந்த செயலை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், எங்களுக்கு வழங்கப்பட்ட தொகையில் திருப்தியில்லை. இந்த மீட்புப் பணியில் எலி வளை சுரங்கத் தொழிலாளர்களின் பங்கு அளப்பரியது. ஆனால், அரசாங்கத்திடமிருந்து பெற்ற தொகை போதுமானதாக இல்லை. அதனால், 12 தொழிலாளர்களும் அந்தக் காசோலைகளைப் பணமாக்க வேண்டாம் என்று கூட்டாக முடிவெடுத்திருக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com