சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், பன்மைத்துவம், மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்புகள் போன்ற பொதுவான மதிப்புகள் நமது நாடுகளின் முன்னேற்றத்துக்கு முக்கியமானவை என்றும், இந்த மதிப்புகள் நமது உறவை வலுப்படுத்துவதாகவும் G20 மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தினர். உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சவால்களைத் தீர்ப்பதற்காக அமெரிக்கா தலைமையையும் எங்கள் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கவும், நிலையான வளர்ச்சியில் முதலீடு செய்தல்,


பருவநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்தல், உணவுப் பாதுகாப்பு, கல்வியை வலுப்படுத்துதல், உலகளாவிய சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல் என அமெரிக்கா உலகிற்கு நேர்மறையான பார்வையுடன் இருப்பதை உணர்த்தியிருக்கிறோம். மேலும், இந்த G20 மாநாட்டில், உக்ரைனில் சட்ட விரோதப் போர் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரைனுக்குத் தேவைப்படும் நியாயமான அமைதி குறித்தும் விவாதித்தோம். வியட்நாம் மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகளை கட்டியெழுப்புவதன் மூலம் உலகம் முழுவதும் உறுதித் தன்மையை வழங்குவதே எங்கள் குறிக்கோள்” எனக் குறிப்பிட்டார்.
நன்றி
Publisher: www.vikatan.com